இற்றைக்கு 2250 ஆண்டுகளுக்கு முன்பாக அனுராதபுரத்தை ஆண்ட மூத்தசிவன் என்னும் அரசனின் இரண்டாவது மகனான தேவநம்பியதீசன் நாகதீபத்தில் கட்டிய 3 புத்த கோயில்களைப் பற்றி மகாவம்சத்தில் குறிப்பிடப்படுகின்றது. நாகதீபம் என்பது யாழ்ப்பாண தீபகற்பத்தை முழுவதுமாகப் குறிக்க பயன்படுத்தப்படும் பெயராகக் கருதப்படுகின்றது. இந்த 3 கோயில்களும் ஜம்புகோள விஹாரை (மாதகல்) , திஸ்ஸ மகா விஹாரை மற்றும் பச்சினாராமயா விகாரை ஆகும் (?).
முதலியார் செ இராசனாயகம் என்பவர் 1926 இல் எழுதிய Ancient Jaffna என்னும் ஒரு புத்த்கத்தில் இவ்விடத்தில் ஒரு கந்தசுவாமி கோவில் இருந்ததாகவும் அதற்கண்மையில் உள்ள் Tissa Maluva என்னுமிடத்தில் இந்த விகாரை இருந்திருக்க வேண்டும் என்றும் எழுதி வைத்துள்ளார்.
திஸ்ஸமகா விஹாரை தையிட்டியில் அமைந்திருந்ததாக அங்கு காணப்பட்ட அரச மரத்தை வைத்து கண்டுபிடித்து 1946ஆம் ஆண்டு களுத்துறை ஷீலாதரதிஸ்ஸ தேரர் மற்றும் கௌதர பன்னாந்த தேரர் ஆகிய இரு பௌத்த குருமார்களால் அங்கு ஒரு சிறிய தாதுகோபமும் விகாரையும் கட்டப்பட்டன. 1946 ஆம் ஆண்டில், ஆபிரகாம் பெரேரா என்ற பக்தர் கோயிலுக்கு 1.25 ஏக்கர் (20 பரப்பு) நிலத்தை நன்கொடையாக வழங்கினார். அந்த விகாரை அமைந்திருந்த காணி படம்-1 இல் சிவப்பு நிறத்தால் காட்டப்பட்டுள்ளது. அந்தப் பத்திரத்தில் திஸ்ஸ விஹாரை என்ற கோயில் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.(ஆனால் இந்த நிலப்பத்திரமானது ஒரு சத்தியச்க்கடதாசியினூடு செய்யப்பட்டுள்ளதாகவும் அது சட்டத்தின்படி செல்லுமடியாகாது என்று காங்கிரஸ் சட்டத்தரணி ஒருவர் எனக்கு கூறினார்)
திஸ்ஸமகா விஹாரை தையிட்டியில் அமைந்திருந்ததாக அங்கு காணப்பட்ட அரச மரத்தை வைத்து கண்டுபிடித்து 1946ஆம் ஆண்டு களுத்துறை ஷீலாதரதிஸ்ஸ தேரர் மற்றும் கௌதர பன்னாந்த தேரர் ஆகிய இரு பௌத்த குருமார்களால் அங்கு ஒரு சிறிய தாதுகோபமும் விகாரையும் கட்டப்பட்டன. 1946 ஆம் ஆண்டில், ஆபிரகாம் பெரேரா என்ற பக்தர் கோயிலுக்கு 1.25 ஏக்கர் (20 பரப்பு) நிலத்தை நன்கொடையாக வழங்கினார். அந்த விகாரை அமைந்திருந்த காணி படம்-1 இல் சிவப்பு நிறத்தால் காட்டப்பட்டுள்ளது. அந்தப் பத்திரத்தில் திஸ்ஸ விஹாரை என்ற கோயில் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
1958 இல் நடைபெற்ற இனக்கலவரத்தை தொடர்ந்து இந்த புத்த விகாரை கைவிடப்பட்டு 70 களின் பின்னான போரில் முற்றாக அழிந்து போய் விட்டது. 1959 இல் வெளியிடப்பட்ட யாழ்ப்பாணத்திற்கான வரைபடத்தில் இந்த விகாரையும் 15 ஏக்கர் அளவான நிலமும் குறிப்பிடப்பட்டுள்ளது. (படம்-2). கீழே உள்ள படம்-1 இல் மஞ்சள் நிறத்தால் இந்த 15 ஏக்கர் காணி காட்டப்பட்டுள்ளது. 1.25 ஏக்கர் காணி எப்படி 15 ஏக்கர் ஆனது என்று தெரியவில்லை. இதை அப்பகுதி மக்கள் சிங்களவன் கலட்டி என்று அழைத்து வந்துள்ளனர்.
படம்-1 : 2025 செய்மதிப்படம். மஞ்சள் - 1959 வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள 15 ஏக்கர் காணி. சிவப்பு- 40 களில் விகாரை அமைக்கப்பட்ட 1.25 ஏக்கர் காணி. ஊதா- தற்போது வேலி போட்டு அடைக்கப்பட்டுள்ள 7 ஏக்கர் காணி.
இந்த 7 ஏக்கர் காணிக்குள் பல பொதுமக்களின் காணிகளூம் உள்ளடக்கப்பட்டு விட்டதாக காணி உரிமையாளர்களால் போராட்டங்கள் செய்யப்படுகின்றன.
தற்போது தெற்கில் இருந்து இயங்கும் அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் தமக்கு 14 ஏக்கர் காணியும் தரப்படவேண்டும் என்று யாழ் மாவட்ட செயலருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிகின்றது.
படம்-1 : 2025 செய்மதிப்படம். மஞ்சள் - 1959 வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள 15 ஏக்கர் காணி. சிவப்பு- 40 களில் விகாரை அமைக்கப்பட்ட 1.25 ஏக்கர் காணி. ஊதா- தற்போது வேலி போட்டு அடைக்கப்பட்டுள்ள 7 ஏக்கர் காணி.
படம்-2 (1959 இல் வெளியிடப்பட்ட வலிகாமம் வரைபடம் )
இந்த 7 ஏக்கர் காணிக்குள் பல பொதுமக்களின் காணிகளூம் உள்ளடக்கப்பட்டு விட்டதாக காணி உரிமையாளர்களால் போராட்டங்கள் செய்யப்படுகின்றன.
தற்போது தெற்கில் இருந்து இயங்கும் அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் தமக்கு 14 ஏக்கர் காணியும் தரப்படவேண்டும் என்று யாழ் மாவட்ட செயலருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிகின்றது.
No comments:
Post a Comment