Thursday, April 24, 2025

உயிர்த்தஞாயிறு தாக்குதல் (2019)- வெளிவந்த-வராத உண்மைகள் - பகுதி-2

🕰️ 2019 உயிர்த்தஞாயிறு  தாக்குதல் தொடர்பான முக்கிய நிகழ்வுகள் வரிசை - Timeline

படம்: LankaWeb 

📌 2018 நவம்பர் 28

🔸 வவுனதீவு காவல் துறையினர் இருவர் கொலை 

ஆரம்பத்தில் இந்தக் கொலைக்கு முன்னாள் விடுதலை *லி உறுப்பினர்கள் குற்றம்சாட்டப்பட்டனர். உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு விசாரணைகளில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) உறுப்பினர்கள், குறிப்பாக சஹ்ரான் ஹாஷிம், இந்தக் கொலைக்குப் பொறுப்பாளி என்று கண்டுபிடிக்கப்பட்டது.

📌 2018 டிசம்பர் – 2019 ஏப்ரல்

🔸 வெடிகுண்டுப் பொருட்கள் வாங்கல்

சஹ்ரான் தலைமையிலான NTJ குழுவினர் 1,900 டெட்டனேட்டர்கள் மற்றும் 1,300 வாட்டர் ஜெல் வெடிமருந்துகளை ஒரு உள்ளூர் வர்த்தகர் மூலம் வாங்கி பல பாதுகாப்பு இல்லங்களில் சேமிக்கப்பட்டு தாக்குதலுக்காக தயார் செய்யப்பட்டது.

📌 2019 மார்ச்

🔸 இந்திய ரோவிலிருந்து பல்வேறு எச்சரிக்கைகள் இலங்கை புலனாய்வுத்துறைக்கு அனுப்பப்பட்டது

இந்திய புலனாய்வு அமைப்பு (RAW) இலங்கைக்கு தாக்குதல் திட்டம், தாக்குபொருட்கள் மற்றும் இலக்குகள் தொடர்பான தகவல்களை அனுப்பியது.

ஆனால் இலங்கை அரசு மற்றும் புலனாய்வுத் துறைகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

📌 2019 ஏப்ரல் 16–19

🔸 இறுதி திட்டமிடல் கூட்டங்கள்

தற்கொலைப்படை உறுப்பினர்கள் இறுதி கூட்டங்களை நடத்தினர். தாகுதல் இலக்குகள் தேர்வு செய்யப்பட்டு வெடிகுண்டுகள் பகிர்வு மேற்கொள்ளப்பட்டது.

📌 2019 ஏப்ரல் 21 — உயிர்த்த ஞாயிறு (Easter Sunday)

🔴 ஒரே நேரத்தில் நடைபெற்ற தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நிகழ்வுகள்:

காலை 8:45 – புனித அந்தோனியார் தேவாலயம், கொழும்பு.

8:47 – Kingsbury ஹோட்டல்.

8:47 – புனித செபாஸ்தியார் தேவாலயம்,  நீர்கொழ்ம்பு.

8:50 – Cinnamon Grand ஹோட்டல்.

8:54 – Shangri-La ஹோட்டல்.

9:05 – சியோன் தேவாலயம், மட்டக்களப்பு.

மாலை 1:20 – New Tropical Inn, தெஹிவளை (Taj Samudra-வில் வெடிக்க தவறிய குண்டு).

📍 உயிரிழந்தோர்: 270-க்கும் மேற்பட்டோர் (5 அமெரிக்கர்கள் உட்பட 50 வெளி நாட்டவர்), 1000-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

📌 2019 ஏப்ரல் 21 (மாலை)

🔸 தெமட்டகொட குண்டு வெடிப்பில் குடும்பத்துடன் பாத்திமா ஜிஃப்ரி தற்கொலை

போலீசார் வீட்டில் சோதனை நடத்தியபோது  இல்ஹாம் இப்ராஹிமின் மனைவி பாத்திமா ஜிஃப்ரி, தன்னையும் மூன்று பிள்ளைகளைகள் மற்றும் 3 STF அதிகாரிகளை கொன்றுகொண்டார். 

📌 2019 ஏப்ரல் 26

🔸 சாய்ந்தமருது பாதுகாப்பு இல்லத்தில் (safe house) தாக்குதல்

இராணுவம் சஹ்ரான் ஹாஷிமின் தந்தை மற்றும் இரு சகோதரர்கள் உட்பட பல NTJ உறுப்பினர்களை சுட்டுக் கொன்றது.

📌 2019–2021

🔸 கைது மற்றும் விசாரணைகள்

முக்கிய NTJ உறுப்பினர்கள் நவ்பார், மில்ஹான், ரிஸ்கான், மற்றும் வெடிகுண்டு வழங்கியவர் M.M.M.H.ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஜனாதிபதி விசாரணைக் குழு (PCoI) தாக்குதலுக்கு முன்னர் தகவல்களை புறக்கணித்தது குறித்து அதிகாரிகளை குற்றம் சாட்டியது.

📌 2023 செப்டம்பர்

🔸 Channel 4 ஆவணப்படம் – புலனாய்வுத் துறைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள்

முன்னாள் TMVP ஊடக செயலாளர் அசாத் மௌலானா NTJ மற்றும் இராணுவ புலனாய்வுத் துறை அதிகாரிகள் இடையிலான சந்திப்புகள் நடந்ததாகக் கூறினார்.

📌 2024–2025

🔸 தொடரும் விசாரணைகள் மற்றும் கைது நடவடிக்கைகள்

பிள்ளையான் மற்றும் அவரது முன்னாள் டிரைவர் ஹுஷைன் /குகன் உள்ளிட்டோர் மீது புதிய விசாரணைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன.

கிழக்குப்பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் TRO உறுப்பினர்கள்  காணாமல் போனது உள்ளிட்ட பழைய வழக்குகளும் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளன.

பகுதி -3: உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்களாக சொல்லப்படுபவற்றின் தர்க்கரீதியான பகுப்பாய்வு. 

No comments:

Post a Comment

ஐ.நா ஆணையாளரின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு! UN High Commissioner Press Conference Sri Lanka. - YouTube கூகிள் மொழிபெயர்ப்பு:  பத்திரிகையாளர...